பதிவு செய்த நாள்
12
பிப்
2016
02:02
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி என்.ஜி.ஒ. நகரில் பழமை வாய்ந்த ஸ்ரீ மங்கள விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 10ம் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கி யது. நேற்று காலை 9: 15 மணிக்கு பூஜைகள் முடிந்து பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. 9: 40 மணிக்கு கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. 10 மணிக்கு வேத மந்திரங்கள் முழந்க சிவாச்சாரியார்கள் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து அருள்மிகு ரிணவி மோஸகர், லலிதாம்பிகை, சுப்பிரமணியர், வள்ளி, தேவசேனா, ஞானசரஸ்வதி, மகாலட்சுமி, தெட்சணாமூர்த்தி, துர்கையம்மன், ஹயகிரீவர், பக்த ஆஞ்சநேயர், காலபைரவர், அரசரடி சித்திவினாயகர் மற்றும் நவகிரகங்க சன்னதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 10:20 மணிக்கு ஸ்ரீ மங்கள விநாயகருக்கு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடைபெ ற்றன. கும்பாபிஷேகத்தை கோயில் அர்ச்சகர் ரமேஷ்சிவம் தலைமையிலானோர் நடத்திவைத்தனர். கும்பாபிஷேகத்தில் தேமுதிக.,மாநில விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏகள் சந்திரமோகன், பன்னீர்செல்வம், டாக்டர் முத்துக்குமார், பொறியாளர்கள் ரமேஷ் பாலாஜி, கார்த்தி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.