கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில், மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் மாசிமகத்தையொட்டி, காலை 8 மணி முதல் ராமநாதீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.பின் உற்சவ மூர்த்தி சந்திரசேகர், ஞானாம்பிகை அம்மன் சுவாமிகள் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக குளக்கரைக்கு ஊர்வலமாக சென்றது. மதியம் 12:00 மணியளவில், ஆண்டாசண்டி குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை 3:00 மணி அளவில் சிறப்பு அபிஷக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், பாலகிருஷ்ண சிவாச்சாரியார், உபயதாரர் சன்னியாசி, ஓதுவார்கள் பழணியாண்டி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தனர்.