Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காய்கறிகள், பழ அலங்காரத்தில் ... மாணவர்களே.. உங்களுக்காக ஹயக்ரீவரிடம் பிரார்த்தனை! மாணவர்களே.. உங்களுக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பதிவு செய்த நாள்

03 மார்
2016
01:03

ஈரோடு: கள்ளுக்கடை மேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, கள்ளுக்கடை மேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த பிப். 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி, கொடியேற்றம், பால்குடம் ஊர்வலம், வெகுவிமர்சியாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை தொடங்கியது. கடந்த, 15 நாட்களாக, காப்புகட்டி, மஞ்சள் ஆடை உடுத்தி, விரதம் கடைபிடித்து வந்த பக்தர்கள், மூன்று நாட்களுக்கு முன்பாகவே குண்டம் இறங்கும் வரிசையில் காத்திருந்தனர். நேற்று அதிகாலை, 5 மணிக்கு, கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அதன் பின்னர் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்கினர். கோவிலில் காப்பு கட்டி பதிவு செய்திருந்த, 10 ஆயிரம் பேருக்கு மேல் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என பலரும் கை குழந்தைகளுடன் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டபடியே, குண்டத்தில் இறங்கி ஓடினர். தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், இரவு உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீயணைப்பு துறையினர், மருத்துவ குழுவினர், பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar