விநாயகப் பெருமானே மூலமுதற்பொருள். எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து தொடங்குவது நம் மரபு. விநாயகருக்கு அருகம்புல் உகந்தது. இதுதவிர, அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மருத இலை - மகப்பேறு உண்டாகும். எருக்க இலை - குழந்தை பாக்கியம், அரச இலை - எதிரி தொல்லை நீங்கும், அகத்தி இலை -கவலை விலகும், அரளி இலை - அன்பு நிலைக்கும், வில்வ இலை- இன்பம் பெருகும், வெள்ளெருக்கு - சகல சவுபாக்கியம், மாதுளை இலை - கீர்த்தி உண்டாகும், கண்டங்கத்தரி இலை - லட்சுமி கடாட்சம்.