பதிவு செய்த நாள்
16
மார்
2016
12:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தேவம்பாடி காளிபாளையம் மந்தக்காடு கருப்பராயன், காளியம்மன் கோவிலில் நடந்த, குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவிலில், 31ம் ஆண்டு பள்ளையம் மற்றும் 10ம் ஆண்டு குண்டம் திருவிழா நடந்தது. இதற்காக கடந்த 10ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மேல், பெரிய கருப்பராயன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு கணபதி ேஹாமம், புண்ணியாக வாசமும், 8:00 மணிக்கு குண்டம் திறப்பு, 9:00 மணிக்கு பூ வளர்த்தல், 12:00 மணிக்கு பள்ளைய பூஜை, 12:30 மணிக்கு கங்கை செல்லுதல், மாலை, 4:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பூ மிதித்தனர். மாலை 6:00 மணிக்கு மேல் அக்னி தணிப்பு அபிேஷக பூஜை மற்றும் கோவில் பூசாரி அருள் வாக்கு நிகழ்ச்சி இடம்பெற்றன.