Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் ... திருமலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி வலம்! திருமலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்: குவியும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பழநியில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்: குவியும் பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

23 மார்
2016
10:03

பழநி: பழநியில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கொடுமுடி தீர்த்தக் காவடிக்கு பெயர் பெற்ற பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு ஈரோடு, காங்கேயம், திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடி, பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில் முத்துகுமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. பழநி பங்குனி உத்திரவிழா மார்ச் 17ல் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி மார்ச் 26 வரை நடக்கிறது. விழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி,தெய்வானையுடன் தங்கமயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் வலம் வருவர்.முக்கிய நிகழ்ச்சியான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. முத்துகுமார சுவாமி, வள்ளி,தெய்வானையுடன் காலையில் தந்தப்பலக்கில் சன்னதிவீதி, கிரிவீதிகளில் வலம் வந்தார். சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், யாகபூஜைகள் செய்து இரவு 8.20 மணிக்கு ருக்கல்யாணம் நடந்தது.இரவு 9.30 மணிக்கு திருமணக்கோலத்தில் முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் சன்னதிவீதி, கிரிவீதியில் திருவுலா வந்தார்.இன்று மலைக் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு நான்கு கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar