Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ... திருப்பரங்குன்றம் கோயிலில் ஏடு கொடுக்கும் திருவிழா திருப்பரங்குன்றம் கோயிலில் ஏடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்துக் காளியம்மன் குண்டம் விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
கொண்டத்துக் காளியம்மன் குண்டம் விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

23 மார்
2016
10:03

அனுப்பர்பாளையம் : பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில், புகழ்பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 16ல், கொடியேற்றத்துடன் குண்டம் தேர்த்திருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்குதல் மற்றும் தேர்த்திருவிழா, நேற்று நடைபெற்றது. அதிகாலை, 4:00 மணிக்கு, குண் டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள படைக்கல சாவடியில் பொங் கல் வைத்து, படைக்கலம் கொண்டு வரப்பட்டது. பரிவார மூர்த்திகளான கன்னிமார், கருப்பராயன், முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு, அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது; காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து, பூசாரி திருமூர்த்தி, விநாயகமூர்த்தி ஆகியோர், குண்டம் இறங்கி, துவக்கி வைத்தனர். தொடர்ந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, ஆயிரகணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கினர். அதன்பின், உப்பு, மிளகு போடுதல் மற்றும் பொங்கல் வைத்தல், மொட்டை போடுதல், கரும்பு படைத்தல் போன்ற வேண்டு தல் நடைபெற்றன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. பிற்பகல், 2.00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் சிம்ம வாகனத்தில் தேரில் எழுந்தருளல்; மாலை, 3.30 மணியளவில், தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர், அவிநாசி, பல்லடம், குன்னத்தூர், நம்பியூர், கோபி, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆன்மிக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11-ம் ... மேலும்
 
temple news
கழுகுமலை; கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலின் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.மருதமலை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மன்னார்குடி; மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவழும் கண்ணனாக வந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar