புத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2016 04:03
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நாலுகரை புத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்குப் பின் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் கல்யாணம் நடந்தது. சுந்தரராஜ பட்டர் தலைமையில் பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.