Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பறவைக்காவடி ஊர்வலம் கோவில் விழாவில் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசியில் பொங்கல் சாட்டு விழா பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
அவிநாசியில் பொங்கல் சாட்டு விழா பக்தர்கள் பரவசம்!

பதிவு செய்த நாள்

25 மார்
2016
11:03

அவிநாசி: பூண்டி மற்றும் அவிநாசியில்,  பல்வேறு கோவில்களில், பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது. திருமுருகன்பூண்டியில்  ஸ்ரீஆதிமுத்துமாரியம்மன்  கோவிலில், 36ம் ஆண்டு பொங்கல் குண்டம் திருவிழா, 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும்  அம்மனுக்கு  அபிஷேகம், சிறப்பு  வழிபாடுகள் நடத்தப்பட்டன.  நேற்று முன்தினம், கும்பம்,  படைக்கலம், அம்மை அழைத்தல், குண்டத்துக்கு பூ போடுதல், திரு க்கல்யாண உற்சவம் நடைபெற்றது.நேற்று அதிகாலை குண்டம் இறங்குதல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றுக்கு பின், பக்தர்கள் பூவோடு,  மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். முத்தாரம்மன், சிவபெருமான், சுடலை மாடசுவாமி, ஆஞ்சநேயர் வேடமிட்ட பக்தர்கள், மேளதாளத்துடன் சென்றனர்.  இன்று மஞ்சள் நீராட்டு விழா, மறுபூஜையுடன், விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, தலைமை நிர்வாகி குமாரவேல் தலைமையிலான உறுப்பி னர்கள் செய்திருந்தனர்.

* அவிநாசி செல்லாண்டியம்மன் கோவிலில், 58வது பொங்கல்  சாட்டு விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய அவ்விழாவில்,  சக்தி அழைத்தல், படைக்கலம், பொங்கல் வைத்தல் நடைபெற்றது. பெண்கள், மாவிளக்கு எடுத்து,  ஊர்வலமாக சென்றனர். பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

* அவிநாசி கிழக்கு வீதி, ஸ்ரீசமயபுரம் மாரியம்மன், அரசமரத்தடி விநாயகர் கோவிலில், 19ம் ஆண்டு பூச்சாட்டு விழா நடந்தது. அவிநாசி லிங்÷ கஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம்  ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. படைக்கலம், அம்மை  அழைத்தல், அக்னி கும்பம் எடுத்தல் உள்ளிட்டவை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, மஞ்சள் நீர் விழாவுடன், பூச்சாட்டு விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar