அருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் பங்குனி விழா துவக்கம் - ஏப்.6 ல் பூக்குழி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2016 12:03
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி ஏப்ரல் 6 ல் நடக்கிறது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்டிற்கு பாத்தியப்பட்ட, முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனைகள், வெவ்வேறு வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
அக்னி சட்டி: 15 நாட்கள் நடக்கும் இவ்விழாவின் எட்டாம் நாளான ஏப்ரல் 5ல் பொங்கல் பண்டிகை நடைபெறுகிறது. பெண்கள் விரதமிருந்து கோயில் முன்பாக பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவர். இது போன்று அன்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9 ம் நாளான ஏப்ரல் 6 பூக்குழி இறங்குதல் நடக்கிறது. அதிகாலையில் நடைபெறும் இதில் ஆண்கள், பெண்கள் விரதம் இருந்து பூக்குழியில் இறங்குவர்.