Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்குடி மாரியம்மன் கோயில் விழா திருவெண்காடு சுவேதாரன்யேசுவர சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் திருவெண்காடு சுவேதாரன்யேசுவர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவில் பக்தர்கள் அறநிலைய துறைக்கு எதிராக போர்க்கொடி
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கோவில் பக்தர்கள் அறநிலைய துறைக்கு எதிராக போர்க்கொடி

பதிவு செய்த நாள்

12 ஏப்
2016
11:04

காஞ்சிபுரம்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலைக்கு பதில், புதிய சிலை செய்ய உத்தரவிட்ட அறநிலையதுறை ஆணையருக்கு எதிராக, பக்தர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

பல்லவர் காலத்தில் உருவான காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், தேவார மூவராலும், மாணிக்கவாசகராலும் பாடல் பெற்ற தலம். அங்கு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் ஐம்பொன் சிலை உள்ளது.

புதிய சிலை: திருவிழாக்களில், இந்த சிலை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறி, புதிய சிலை செய்யப் போவதாக அறநிலைய துறை அறிவித்துள்ளது. பல்வேறு எதிர்ப்புகளால், அந்த பணி இன்னும் துவங்கவில்லை. இந்த நிலையில், காமாட்சி அம்மன் கோவில் பக்தர்கள், 1008 பேர், புதிய சிலை செய்வதை கண்டித்து, இந்து சமய அறநிலைய துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: அறநிலைய துறை ஆணையருக்கு, மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட அனுமதி இல்லை என, அறநிலைய துறை சட்டம் கூறுகிறது. இதை, உச்சநீதிமன்றத்திலும், அறநிலைய துறை உறுதிப்படுத்தி உள்ளது.

மிரட்டல்:
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலைக்கு பதில், கோவில் செலவில் புதிய சிலை செய்ய யார் அனுமதி கொடுத்தனர்? ஆகமவிதி மீறி, புதிய சிலை செய்யப்படுகிறது. இதில், அர்ச்சகர்கள் மிரட்டப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பழமையான சோமாஸ்கந்தர் சிலையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். புதிய சிலை செய்வதை அறநிலைய துறை கைவிட வேண்டும். ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல், அறநிலைய துறை அதிகாரியே தக்காராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சட்டவிரோதமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar