Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்குடி மாரியம்மன் கோயில் விழா திருவெண்காடு சுவேதாரன்யேசுவர சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் திருவெண்காடு சுவேதாரன்யேசுவர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவில் பக்தர்கள் அறநிலைய துறைக்கு எதிராக போர்க்கொடி
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கோவில் பக்தர்கள் அறநிலைய துறைக்கு எதிராக போர்க்கொடி

பதிவு செய்த நாள்

12 ஏப்
2016
11:04

காஞ்சிபுரம்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலைக்கு பதில், புதிய சிலை செய்ய உத்தரவிட்ட அறநிலையதுறை ஆணையருக்கு எதிராக, பக்தர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

பல்லவர் காலத்தில் உருவான காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், தேவார மூவராலும், மாணிக்கவாசகராலும் பாடல் பெற்ற தலம். அங்கு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் ஐம்பொன் சிலை உள்ளது.

புதிய சிலை: திருவிழாக்களில், இந்த சிலை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறி, புதிய சிலை செய்யப் போவதாக அறநிலைய துறை அறிவித்துள்ளது. பல்வேறு எதிர்ப்புகளால், அந்த பணி இன்னும் துவங்கவில்லை. இந்த நிலையில், காமாட்சி அம்மன் கோவில் பக்தர்கள், 1008 பேர், புதிய சிலை செய்வதை கண்டித்து, இந்து சமய அறநிலைய துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: அறநிலைய துறை ஆணையருக்கு, மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட அனுமதி இல்லை என, அறநிலைய துறை சட்டம் கூறுகிறது. இதை, உச்சநீதிமன்றத்திலும், அறநிலைய துறை உறுதிப்படுத்தி உள்ளது.

மிரட்டல்:
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலைக்கு பதில், கோவில் செலவில் புதிய சிலை செய்ய யார் அனுமதி கொடுத்தனர்? ஆகமவிதி மீறி, புதிய சிலை செய்யப்படுகிறது. இதில், அர்ச்சகர்கள் மிரட்டப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பழமையான சோமாஸ்கந்தர் சிலையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். புதிய சிலை செய்வதை அறநிலைய துறை கைவிட வேண்டும். ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல், அறநிலைய துறை அதிகாரியே தக்காராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சட்டவிரோதமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar