மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: ஆறாம் நாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2016 10:04
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். திருஞானசம்பந்தரின் மூன்று வயதில், அவரது தந்தை சிவபாத இருதயர் அவரை அழைத்துக் கொண்டு சீர்காழி தோணியப்பர் கோவிலுக்குச் சென்றார். குழந்தையை கோவிலில் உள்ள குளக்கரையில் அமர்த்தி விட்டு நீராடக் கிளம்பினார். நேரமானதால் பசியால் வாடிய சம்பந்தர் அம்மா என்று அழத் தொடங்கினார். சிவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் மட்டும் வராமல், அம்மா என்று அழைத்ததால், பார்வதியையும் அழைத்து வந்தார். அம்பிகை சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்து மறைந்தாள். கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்றிருந்த சம்பந்தரிடம் கோபம் கொண்டார். உனக்கு பாலுாட்டியது யார்? என்று கேட்க, குழந்தை, தோடுடைய செவியன்... என்ற பாடியது. அப்போது சிவபார்வதி ரிஷப வாகனத்தில் காட்சி தந்தனர். அந்த அருட்காட்சியை எல்லாரும் பெற சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர்.