Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சையில் சித்திரை திருவிழா ... பாலமலையில் அன்னவாகன உற்சவம் பாலமலையில் அன்னவாகன உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் பூரம் திருவிழா பாதுகாப்புடன் கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
திருச்சூர் பூரம் திருவிழா பாதுகாப்புடன் கொண்டாட்டம்!

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
10:04

திருச்சூர்: கேரளாவில் பூரம் திருவிழா, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதே சமயம், முன்னெச்சரிக்கையாக உரிய பாதுகாப்புடன், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தன. கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில், பெரியளவில் வாண வேடிக்கைகள் நடைபெறுவதுடன், யானைகள் அணிவகுப்பும் நடைபெறும். இந்நிலையில், கொல்லம் அருகே புற்றிங்கல் தேவி கோவிலில் வெடி விபத்து நடந்து, 113 பேர் உயிரிழந்ததால், இந்த ஆண்டு பூரம் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், கேரளாவின் பாரம்பரிய விழாவை சீர்குலைக்கக் கூடாது எனக் கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கெடுபிடிகள் தளர்த்தப்பட்டதுடன் குறைந்த சத்தம் கொண்ட வெடிகளை வெடிக்க, கேரள ஐகோர்ட் அனுமதி வழங்கியது.

இதையடுத்து பூரம் திருவிழா, வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. வடக்குநாதர் கோவில் மைதானத்தில் காலையில் தொடங்கிய நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். யானைகளின் கண்கவர் அணி வகுப்பு நடந்தது. இசை வாத்தியங்களின் இன்னிசையும் நடந்தது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானோர் பூரம் விழாவை கண்டு களித்தனர். உரிய கண்காணிப்புடன் இரவில் நடைபெறும் வாண வேடிக்கையுடன், இன்று காலை, விழா நிறைவு பெறுகிறது. பூரத்தையொட்டி, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழா உற்சாகமாக கொண்டாடப்பட்ட அதே வேளையில் உரிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar