திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த வரும் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் வலம் வந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேரோட்டத்தில் பக்தர்கள் பால்குடம், அலகு காவடிகள் எடுத்து சென்று நேர்த்தி கடன் செலுத்தினர்.