பதிவு செய்த நாள்
21
ஏப்
2016
04:04
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோமாதா பூஜை நடந்தது. திருவாடானையில் உள்ள ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு, 108 கோமாதா பூஜை நடந்தது.
உலக நன்மைக்காக நடந்த இப் பூஜையில், பல்வேறு கிராமங்களில் உள்ள பசுமாடுகளை உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். அனைத்து மாடுகளுக்கும் மாலைகள், வேட்டி, துண்டுகள் அணிவிக்கபட்டு, குங்குமம், சந்தனம் பூசபட்டது. புல்கள், கீரைகள், வாழைபழம் உணவாக வழங்கபட்டது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத மாடுகளுக்கு தீப, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கார்த்திகை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.