Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியகுளம்-ஆண்டிபட்டியில் விநாயகர் ... குறிச்சியில் விநாயகர் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் 17ம் தேதி உறியடி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2011
11:09

ஏர்வாடி : திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் ஆவணி உறியடி உற்சவ திருவிழா மற்றும் கருடசேவை வரும் 17ம் தேதி நடக்கிறது.108 வைணவ திருத்தலங்களில் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலும் ஒன்றாகும். திருக்குறுங்குடி ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை வளங்கள் சூழ நடுவில் கம்பீராக மலைநம்பி கோயில் அமைந்துள்ளது. மலைநம்பிக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் சனிக்கிழமைகளில் குறிப்பாக கடைசி சனிக்கிழமைகளில் அதிகமாக வந்து செல்வர். இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி கடைசி சனிக்கிழமை நடக்கும் உறியடி உற்சவ திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்தாண்டு ஆவணி மாத உறியடி உற்சவ திருவிழா வரும் 17ம் தேதி நடக்கிறது. அன்று காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடக்கிறது. அதன்பின் ராமானுஜ ஜீயர் மடத்து பரம்பரை தலைவர் அழகியநம்பி பாண்டிய தலைவர் குடும்பத்தாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. மாலை 4 மணிக்கு கண்ணன் சேவா சங்கத்தின் சார்பில் உறியடி உற்சவ திருவிழா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சாயராட்சை பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு மலைநம்பி சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். ஏற்பாடுகளை திருக்குறுங்குடி ஜீயர்மடம் பவர் ஏஜன்ட் ஸ்ரீநிவாசன், மேலாளர் திருநாராயணன், பரம்பரை தலைவர் அழகியநம்பி பாண்டிய தலைவர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar