பழநியில் 23 நாளில் மொத்த உண்டியல் வசூல் ரூ.2.28 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2016 11:04
பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில் 23 நாட்களில் ரொக்கமாக ரூ. 2 கோடியே 28 லட்சத்து 53 ஆயிரம் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் இரண்டு நாட்களாக உண்டியல் எண்ணிக்கை நடந்தது. நேற்றைய எண்ணிக்கையில் தங்கம் 102 கிராமும், வெள்ளி 3,680 கிராமும், வெளிநாட்டு கரன்சி 50, ரொக்கமாக ரூ. 57 லட்சத்து 58 ஆயிரத்து 596 கிடைத்துள்ளது. இத்துடன் நேற்றுமுன்தினம் எணிக்கையில் கிடைத்த ரொக்கம் ரூ. ஒரு கோடியே 70 லட்சத்து 95 ஆயிரத்து4ஐயும் சேர்த்து 23 நாட்களில் மொத்தம் ரூ. 2கோடியே 28 லட்சத்து 53 ஆயிரத்து 600 கிடைத்துள்ளது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், முதுநிலைகணக்கியல் அலுவலர் வீரச்சாமி, மற்றும் கோயில் அலுவலர்கள், வங்கிப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.