பதிவு செய்த நாள்
29
ஏப்
2016
12:04
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த அருணாபுரம் ஒட்டம்பட்டு கிராமங்களில், கூத்தாண்டவர் தேர்த் திருவிழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த அருணாபுரத்தில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடந்தது. அரவாணிகள் தாலிக்கட்டும் வைபவம், கூத்தாண்டவர் இந்திர விமானத்தில், திருமண கோலத்தில் வீதியுலா நடந்தது. இதைதொடர்ந்து, மறுநாள் காலை 9:00 மணிக்கு, சுவாமி பிரம்மாண்ட உருவத்தில், யுத்த கோலத்தில் தேர் வடிவில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், ஒட்டம்பட்டு கிராமத்தில் உள்ள ஆதிகூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது. கூத்தாண்டவர் திருமண கோலத்தில் எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட கரகம் வீதியுலா நடந்தது. பின், யுத்த கோலத்தில் அரவான் தேர்பவனியும், அரவான் களபலி உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான அரவாணிகள் கலந்து கொண்டனர். இரவு 10:00 மணிக்கு, இந்திர விமானத்தில் சுவாமி காட்டுக் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.