பதிவு செய்த நாள்
30
ஏப்
2016
12:04
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த இருப்பு பிடாரி அரசியம்மன் கோவிலில், இன்று (30ம் தேதி) செடல் உற்சவம் நடக்கிறது. இருப்பு பிடாரி அரசியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் காலை 7:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, மாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7:00 மணியளவில் பிடாரி அரசியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். நேற்று (29ம் தேதி) காலை 8:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, இரவு 10:00 மணியளவில் தீர்த்தக்குளக்கரையில், சிவபெருமான், அரசியம்மன் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 11:00 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். இன்று (30ம் தேதி) காலை 5:00 மணியளவில் காவடி, செடல், திருத்தேர் உற்சவம், நாளை (1ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவம், 2ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதன், மாவட்ட உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் சுபத்ரா, பரம்பரை தர்மகர்த்தா அறிவின்சிகரம், டாக்டர் ராமச்சந்திரன் மற்றும் இருப்பு ஊராட்சியைச் சேர்ந்த உபயதாரர்கள் செய்திருந்தனர்.