பதிவு செய்த நாள்
30
ஏப்
2016
12:04
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவில் உள்ள செல்வ மகா கணபதி, பாலமுருகன், ஐயப்பன், துர்க்கை, நவசக்தி விநாயகர் கோவில்கள் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 28ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. மாலை மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை கோ பூஜை, சூரிய பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, திரவியாகுதி, பரிசாகுதி நடந்து யாத்ராதானம் கடம் புறப்பாடு நடந்து காலை 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ரவிசுந்தர் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். செங்குந்தர் தெரு பொதுமக்கள், இளைஞர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.