பதிவு செய்த நாள்
02
மே
2016
11:05
திருவொற்றியூர்: காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், 10 நாள் உடையவர் உற்சவம், நேற்று காலை துவங்கியது. சின்ன காஞ்சிபுரம் என அழைக்கப்படும், திருவொற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில், உடையவர் உற்சவம், நேற்று காலை, திவ்ய பிரபந்தம் பாசுரம் பாராயணம் செய்யப்பட்டு துவங்கியது. 10 நாள் திருவிழாவில், முதல் நாளான நேற்று காலை, உடையவருக்கு திருமஞ்சனமும், மாலை, சிறப்பு அலங்காரமும், மண்டகபடியும் நடைபெற்றது. ழாவின் கடைசி நாளான, 10ம் தேதி, உடையவர் சாற்றுமுறை நடைபெறும். அப்போது, சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு உடையவர் காட்சியளிப்பார். இந்த கோவிலின் முக்கிய சிறப்பு தினங்களில், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர்.