பதிவு செய்த நாள்
03
மே
2016
11:05
மல்லேஸ்வரம்: மல்லேஸ்வரம் கங்கம்மா தேவி கோவில் கரக திருவிழா, 9 முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. மல்லேஸ்வரம் கோதண்டராமபுரம் முதல் பிரதான சாலை, 12வது கிராசில் பிரசித்தி பெற்ற கங்கம்மா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கரக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 9ம் தேதி மாலையில் சர்க்கிள் மாரியம்மன் கோவிலிருந்து பால் குட ஊர்வலம் துவங்குகிறது. இரவில் அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. செவ்வாய்க்கிழமை காலையில் மங்களார்த்தி, மதியம் கும்ப நைவேத்தியம், அம்பலி மற்றும் மகா மங்களார்த்தி, பிரசாத வினியோகம் இரவில் கரக ஊர்வலம் கோவிலிலிருந்து புறப்பட்டு, வயாலிகாவல், சித்தாந்தி பிளாக், கிருஷ்ணப்பா பிளாக், ரங்கநாதபுரம், சம்பிகே சாலை வழியாக, அதிகாலை, 2:00 மணிக்கு கோவிலை வந்தடைகிறது.
வரும், 11ம் தேதி சுமங்கலி பூஜை, பகலில் கோதண்டராமபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் அன்னதானம், மாலையில் தேரோட்டம் நடக்கிறது. கோவிலிலிருந்து தேர் புறப்பட்டு, கோதண்டராமபுரம் பிரதான சாலை வயாலிகாவல், குட்டஹள்ளி பிரதான சாலை, மல்லேஸ்வரம், 8வது கிராஸ், சம்பிகே பிரதான சாலை காடு மல்வேல்வரம் கோவில் வழியாக, மீண்டும் கோவிலை வந்தடைகிறது. இரவு 7.00 மணிக்கு இரண்டாவது நாள் கரக ஊர்வலம் புறப்படுகிறது. இந்த ஊர்வலம், மாரம்மா தேவி கோவில் சர்க்கிள் 18 கிராஸ், சம்பிகே பிரதான சாலை, கணபதி கோவில், 9வது கிராஸ், மாரம்மா தேவி கோவில், மல்லேஸ்வரம் முனீஸ்வரா பிளாக், குட்டஹள்ளி, வயாலிகாவல், வெங்கடராமணபுரம் கோதண்டராமபுரம் வழியாக கோவிலை வந்தடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.