பதிவு செய்த நாள்
04
மே
2016
12:05
திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், மார்ச், 18ல் நடைபெற்றது. தொட ர்ந்து, தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. தினமும் கலச பூஜை, பல்வேறு திரவியங்களில் அபிஷேகம், தீபாராதனை நடந்து வந்தது. மண்டல பூஜை, நாளையுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை, 6:00 முதல், 8:00 வரை, முதற்கால யாக பூஜை துவங்குகிறது. நான்கு வேதங்களும், பன்னிரு திருமுறைகள் முழங்க, திருப்பரங்குன்றம் ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாலயம், முதல்வர் ராஜாபட்டர் தலைமையில் பூஜை நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற உள்ளது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீசுப்ரமணியருக்கு, 108 சங்கு பூஜை மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு, 108 கலச பூஜை நடத்தப்பட்டு, புனித நீர் மற்றும் சங்காபிஷேகம் நடக்கிறது. நாளை காலை, 10:30 மணிக்கு, மகா தீபாராதனை, பிரசாரம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.