பதிவு செய்த நாள்
05
மே
2016
12:05
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, தேரடி சன்னிதி தெருவில் பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள், குத்தாட்டம் போட்டதால், பக்தர்கள் முகம் சுளித்தனர். திருவொற்றியூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர், பால்ராஜை ஆதரித்து, வடிவுடையம்மன் கோவில் சன்னிதி தெருவில், நேற்று காலை பிரசாரம் நடந்தது. அதில், 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று, ஓட்டு சேகரித்தனர். பெண்கள் சிலர், மேளதாளத்துக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டனர். இதனால், பக்தர்கள் முகம் சுளித்தனர்.