பழநியில் அக்கினி நட்சத்திர விழா சித்திரை கழுவு மே 7ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2016 12:05
பழநி: பழநியில் அக்கினி நட்சத்திர விழா நாளை மறுநாள் மே 7ல் துவங்கி 20 வரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரைபின் ஏழு, வைகாசி முன் ஏழு நாட்களில் அக்னி நட்சத்திர விழா பழநியில் கொண்டாப்படுகிறது. இவ்வாண்டு வருகிற மே 7 முதல் 20 வரை சித்திரை கழுவுத் திருவிழா என அழைக்கப்படும் அக்னி நட்சத்திர விழா நடக்க உள்ளது. இந்நாட்களில் சேலம், திண்டுக்கல், கரூர், நாமக்கல், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொள்வர். மூலிகை காற்று: இவ்விழா நாட்களில் பழநி கிரிவீதியில் பூத்துக்குலுங்கும் கடம்ப மரப்பூக்களின் வாசத்தை நுகர்ந்தால் வயிற்றுவலி, உஷ்ணநோய் போன்ற வெப்ப வியாதிகள் குணமாகும் என்ற நம்பிக்கை பலகாலமாக உள்ளது. இதன் காரணமாக பெண்கள் கிரிவீதியில் பூத்திருக்கும் கடம்ப மரப்பூக்களை தங்கள் தலையில் சூடி அதிகாலை நேரம், மாலை நேரங்களில் மலைக் கோயிலை கிரிவலம் வருகின்றனர். விழா நிறைவு நாளான மே 20ல் மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.