உங்கள் வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல் மாலையில் பழம். பால் மட்டும் அருந்தி பூஜையைத் தொடங்க வேண்டும். மாலை 6.30 இரவு 9.30, 12.30 அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்டினாலே போதும் இடைப்பட்ட நேரத்தில், குடும்பத்துடன் அமர்ந்து சிவாய நம என்ற மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான கதை மற்றும் பாடல்களை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம்.