சரநாராயண பெருமாள் கோவிலில் ராமானுஜரின் திருநட்சத்திர விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2016 10:05
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், ராமானுஜ சுவாமிகளின் ஆயிரமாவது திருநட்சத்திர விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு, மூலவர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் ராமானுஜருக்கு சிறப்பு திரு மஞ்சனம், வேதபிரபந்த சேவை, சாற்றுமறையும், தீபாராதனையும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.