முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் கரகத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2016 11:05
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் கரகத் திருவிழா நடந்தது. முருங்கப்பாக்கம் திரவுபதி யம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 9ம் தேதி, மாரியம்மனுக்கு கூழ்வார்த்தலுடன் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு அம்மன் சுவாமி வீதி உலா நடந்தது. கடந்த 10ம் தேதி கொடியேற்றம், 23ம் தேதி கரகத் திருவிழா, இரவு சுவாமி வீதி உலா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 5:00 மணிக்கு பகாசூரன் வதம் நிகழ்ச்சி நடந்தது. இன்று (25ம் தேதி) அர்ச்சுனன் - திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 26ம் தேதி அர்ச்சுனன் தவம், 27ம் தேதி படுகளம் மற்றும் தீமிதி திருவிழா, 28ம் தேதி தெப்பல் திருவிழா, 3ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.