Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவபெருமானுக்கும் நந்திக்கும் ... ராமனை பின்பற்றுங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உனக்குள்ளேயே ஓடும் இதிகாசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2016
05:05

ராமாயணம், மகாபாரதத்தை இதிகாசங்கள் என்று குறிப்பிடுகிறோம். ராமனின் வாழ்க்கையைக் கூறுவது ராமாயணம். இதைப் படிப்பதால் என்ன லாபம் என தெரியுமா? நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டமே ராமாயணம். இந்த போராட்டம் மனிதன் பிறந்தது முதல் அவனுக்குள்ளேயே தொடர்கிறது. பரம்பொருளாகிய ராமரும், நம் உயிராகிய சீதையும் ஆட்சி செய்யும் இதயமே அயோத்தி. அயோத்தி என்பதற்கு யுத்தமில்லாத இடம் என்று பொருள். ஆனால், ராவணன் எனப்படும் மனம் கட்டுக்கடங்காமல், சீதையை ராமனிடம் இருந்து பிரித்து தனக்குச் சொந்தமாக்க முயல்கிறது. மாயாவி போல வந்து சீதையை அபகரித்த ராவணனுக்கு பத்து முகங்கள். மனமும் கண், காது, மூக்கு, நாக்கு, மெய், கை, கால், குறி, குதம், வாய் என்னும் பத்து இந்திரியங்களின் வழியாக நம்மை ஆட்டுவிக்கிறது. சீதையைச் சூழ்ந்த அரக்கியர் போல, மனம் போன வழியில் சென்ற உயிரைச் சுற்றி காமம், சினம், மோகம், கடுஞ்சொல் ஆகிய அரக்கியர் சூழ்ந்து விடுகின்றனர். சீதையைப் பிரிந்த ராமர் வாடுவதுபோல, ஜீவாத்மாவைப் பிரிந்த பரமாத்மாவும் வாடிநிற்கிறார். இருவரையும் இணைக்கப் பாடுபடுகிறார் ஆஞ்சநேயர். இவரே கணையாழி, மோதிரம் இரண்டையும் ராமசீதையின் அடையாளமாகக் கொடுத்து பாலம் அமைக்கிறார். அதுபோல, நல்ல குருநாதர் உயிரையும், கடவுளையும் இணைக்கும் பாலத்தை ஏற்படுத்தி நல்வழிகாட்டுகிறார். சீதையும், ராமனும் மீண்டும் அயோத்தியை அடைந்து நல்லாட்சியை தொடங்கியது போல மனிதனும் நல்லவனாகிறான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar