பதிவு செய்த நாள்
26
மே
2016
11:05
உடுமலை: சின்னவாளவாடி மாரியம்மன் கோவில் உற்சவத் திருவிழா, மஞ்சள் நீராட்டுடன் இன்று நிறைவடைகிறது. உடுமலை, சின்னவாளவாடி, அமணமருத்திரத்தில் அமைந்துள்ளது, மாரியம்மன் கோவில். கோவில் உற்சவ திருவிழா, மே 10ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 17ம் தேதி திருவிழா கம்பம் போடுதலும், 23ம் தேதி, பழையூர் மாரியம்மன் கோவிலில், கம்பம் போடுதலும், 24ம் தேதி, சக்தி அழைத்தலும், நேற்று அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தன. தொடர்ந்து, மாவிளக்கு, பொங்கல் எடுத்தலும், இரவு, கம்பம், சக்தி கும்பம் கங்கையில் விடுதலும் நடந்தது. திருவிழா நிறைவு நாளான இன்று, பிற்பகல், மஞ்சள் நீராட்டும், அம்மன் வீதியுலாவும், இன்றிரவு, 7:00 மணிக்கு, பட்டிமன்றம் நிகழ்ச்சி நடக்கின்றன.