Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொட்டைக்கு ரூ.40, குளியலுக்கு ரூ.20 ... சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவான்மியூர் கோவில் குளத்தில் கழிவுநீர்: பக்தர்கள் கண்ணீர்
எழுத்தின் அளவு:
திருவான்மியூர் கோவில் குளத்தில் கழிவுநீர்: பக்தர்கள் கண்ணீர்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2016
12:06

திருவான்மியூர்: திருவான்மியூரில் கோவில் குளத்தில், கழிவுநீரும், குப்பையும் சேருவதால், பக்தர்கள் பெரிதும் வேதனைக்கு உள்ளாகிஉள்ளனர்.

திருவான்மியூர் வடக்கு மாடவீதியில், மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இயங்கி வருகிறது. அந்த கோவிலின் அருகில், பக்தர்கள் புனித நீராடுவதற்கு மருந்தீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. அந்த குளத்தைச் சுற்றிய பகுதிகளில் சிறுசிறு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

நிறம் மாறும் நீர்: இந்நிலையில், குளத்தைச் சுற்றிய பகுதிகளில், இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு மது பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டுச் செல்கின்றனர். மேலும், சிலர் சிறுநீர், மலம் கழித்து விட்டுச் செல்கின்றனர். இதனால், குளமும், குளத்தைச்சுற்றியுள்ள பகுதிகளும் மாசுபட்டு வருகின்றன. குளத்துத் தண்ணீரில் கழிவுநீரும் கலப்பதால், நீரின் நிறம் மாறி, துர்நாற்றமும் அடிக்கிறது.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் கூறுகையில்: திருவிழாக் காலங்களில், சுவாமி சிலைகளை புனித நீராடச் செய்வதற்கு பயன் படுத்தப்படுவதால், இந்த தெப்பக்குளம் புனிதமான குளமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை, இந்த குளத்தை முறையாக பராமரிப்பதே இல்லை. உரிய கவனிப்பின்மையால், குளம் மாசுபட்டு உள்ளது என்றனர்.

பிளாஸ்டிக் கழிவு: அருகில் குடியிருக்கும் மக்கள் சிலர் கூறுகையில், இப்போதெல்லாம் எங்கே குடிப்பதென்று விவஸ்தை இல்லாமல், பொது இடங்களில் குடிப்பது அதிகமாகிவிட்டது. குளத்தின் அருகிலேயே சிலர் குடித்து விட்டு, மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை, குளத்திற்குள் எறிகின்றனர். அருகிலேயே திருவான்மியூர் காவல் நிலையம் இருந்தும் போலீசார் கண்டுகொள்வதில்லை. பார்க்கவே மிகவும் வேதனையாக உள்ளது என்றனர்.
இந்த குளத்தின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில், இதனை சுத்தம் செய்ய, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினரும், குளத்திற்கு அருகில், குடிமகன்கள் போடும் ஆட்டத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar