செஞ்சி: செஞ்சி அருகே உள்ள வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.
அதனையொட்டி அமாவாசையன்று காலையில் வினாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.