பெருமாள் கோவில் தரிசனத்தின் போது பக்தர்களுக்கு துளசி, தீர்த்தம், சடாரி வழங்கப்படும். இதில் தீர்த்தம் உத்தரணியில் (கரண்டி) மூன்றுமுறை தரப்படும். இதற்குரி<ய காரணத்தை ‘த்ரி பிபேத் த்ரிவிதம் பாபம் தஸ்யேஹாஸு விநச்<யதி’ என்று ‘ஸ்மிருதி வாக்<யம்’ விவரிக்கிறது. ‘எண்ணம், சொல், செ<யல் மூன்றாலும் ஒருவர் செய்த பாவம் நீங்கி துõய்மை பெற வேண்டும்’ என்பது இதன் பொருள். வைதீக முறைப்படி வீட்டிலோ, கோவிலிலோ கலசம் (குடம்) வைத்து பூஜித்து வழங்கப்படும் தீர்த்தத்திற்கும் இந்த விதி பொருந்தும்.