ரமலான் சிந்தனைகள் - 23: வாழ்வுக்கு தேவையான படிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2016 10:06
அல்லாஹ் இறக்கிய முதல் குர்ஆன் வசனமே... ஓதுவீராக, உம்மைப் படைத்த இறைவனின் பெயரால். அவன் எழுதுகோல் கொண்டு உமக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான்.. என்பது தான்.ஆம்... படிப்பே பிரதானம் என்று துவங்குகிறது குர்ஆன். அரபு நாட்டில் கல்வியறிவு குறைந்திருந்த காலத்தில், நபிகள் நாயகம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.கல்வி, ஒரு காணாமல் போன ஒட்டகம். அதைத் தேடி கண்டறிந்து கொள்ளுங்கள். சீன தேசம் சென்றாவது சீர்கல்வியைத் தேடிக் கொள்ளுங்கள் என்றார் அவர்.இஸ்லாமைக் காப்பாற்றும் பத்ரு போர்க்களத்தில் பிடிபட்ட சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமானால், ஒவ்வொரு கைதியும், அரபு மக்களில் பத்து பேருக்காவது கல்வி கற்றுத்தர வேண்டும் என்ற நிபந்தனையே விதிக்கப்பட்டது.கல்வியைத் தேடி ஒருவன் புறப்படுகிறான் என்றால், இறைவனின் பாதையில் அவன் பயணம் செய்கிறான் என்கிறார் நாயகம். மாணவர்கள் அனைவரும் மிக நன்றாகப் படித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடி தர வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.17 மணி.