Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரியகோவிலில் வராஹி அம்மன் ... ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா! ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா!
எழுத்தின் அளவு:
செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா!

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2016
11:07

சென்னை: “குருவுக்கு மரியாதை செய்யும் வகையில், செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, ஆகஸ்டில் நடத்தப்படும். இதில், கர்நாடக இசை  குறித்த சந்தேகங்களுக்கு மகான்கள் விளக்கமளிப்பர்,” என, கர்நாடக இசை கலைஞரும், திரைப்பட பின்னணி  பாடகருமான ஜேசுதாஸ்  தெரிவித்தார். சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில், நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில் ஜேசுதாஸ் கூறியதாவது: குரு இல்லாமல்  எதுவும் கிடையாது;  குரு கடாட்சம் இருந்தால், கடல் போல ஞானம் வளரும். செம்பை வைத்தியநாத பாகவதரிடம் சில காலம் படித்தாலும், பல  யுகங்கள் படித்த அனுபவம் கிடைக்கும். அவரின் அருளால் பெயர், புகழ் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. எனவே, அவருக்கு குரு பூஜை  செய்ய நினைக்கிறோம்.

அதற்காகவே இந்த இசை விழா நடத்தப்படுகிறது. இனி ஒவ்வொரு ஆண்டும், இவ்விழா தொடர்ந்து நடத்தப்படும். இது ஒரு சங்கீத அமைப்பி ற்கான விழா. இதில், இசை ஈடுபாடு உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும். ஆக., 30, 31, செப்., 1 ஆகிய மூன்று நாட்கள், சென்னை, தி.நகர், கி ருஷ்ண கான சபாவில்  இசை நிகழ்ச்சி, கர்நாடக இசை பயிற்சி பட்டறை நடத்தப்படும். இதில், மூத்த இசை கலைஞர்கள், வித்வான்கள், மகான்கள்  பங்கேற்கின்றனர். வளரும் கலைஞர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், விளக்கமும் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூத்த கர்நாடக இசை கலைஞர் டி.வி.கோபாலன் கூறியதாவது: அனைத்து வித்வான்களும் நலமுடன் இருக்க பாடுபட்டவர் செம்பை வைத்தியநாத  பாகவதர். அவர் பாடாத ராகங்களே இல்லை.  அந்த காலத்திலேயே, 79 கிராம போன்களில் அவரது பாடல்கள் உள்ளன. பல விருதுகளுக்கு சொந் தக்காரர். என், 8வது வயதில் அவருக்கு மிருதங்கம் வாசித்த பெருமை எனக்கு உண்டு. அவரின் பிரதான சிஷ்யன் தான் ஜேசுதாஸ். அவரின் திரு வனந்தபுரம், ‘தரங்கிணிஸரி’ இசைப்பள்ளி சார்பில் இந்த இசை விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், செம்பை  வைத்தியநாத பாகவதர் மகன் ஸ்ரீனிவாசன், கிருஷ்ண கான சபா செயலர் பிரபு,  பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ... மேலும்
 
temple news
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மஹாசிவராத்திரி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில், கருட சேவை உத்வம் விமரிசையாக ... மேலும்
 
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று மீண்டும் நாட்டியஞ்சலி விழா துவங்கியது. ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar