Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்வ விநாயகர் கோவிலில் 108 ... திருமுருகநாதர் கோவில் வளாகத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணி: அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க உத்தரவு
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணி: அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க உத்தரவு

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2016
11:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபி ஷேகம், 2002 ஜூன் 27ம் தேதி நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபி ஷேகம் நடத்த வேண்டும் என்பதால், இதற்கான திருப்பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி பாலாலயத்துடன் தொடங்கியது. ஓராண்டுக்குள் பணி முடிந்து, கும்பாபி ஷேகம் நடத்த, 27 கோடி ரூபாய் மதிப்பில் உபயதாரர்களின் பங்களிப்புடன் பணிகள் துவங்கியது. இதில் கடந்த அக்டோபர், முதல் டிசம்பர் வரை மழை மற்றும் தீப திருவிழாவினாலும் பணிகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து தேர்தல் வந்ததால் மந்த கதியில் பணிகள் நடந்தன. தற்போது, கும்பாபி ஷேக பணிகள் சுறுசுறுப்படைந்து, 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. உட்பிரகார சன்னதிகளில் வர்ணம் பூசும் பணி முடிக்கப்பட்டுள்ளது. கும்பாபி ஷேக பணிகள் விரைந்து முடிப்பது குறித்து, கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா உபயதாரர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது, வரும் அக்டோபர் மாதத்துக்குள் பணிகள் முழுவதும் முடிக்க வேண்டும். பணி முடிந்தால்தான் தீப திருவிழா நடத்த எந்த அசவுகரியமும் ஏற்படாது. உபயதாரர்கள், ஸ்தபதி வேலை செய்வதற்கேற்ப உடனடியாக பணம் வழங்க வேண்டும். பணம் வழங்கவில்லையெனில் ஸ்தபதிகள் பணிகளில் சுணக்கம் காண்பிப்பர் என இணை ஆணையர் ஹரிப்பிரியா கூறினார். கோபுரங்களுக்கு, ஏற்கனவே அடிக்கப்பட்டுள்ள விபூதி கலர் போன்ற வர்ணம் பூசவும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. வரும் ஜனவரி மாதத்துக்குள் கும்பாபி ஷேகம் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar