Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாத பவுர்ணமி: திருவண்ணாமலை ... வெள்ளாத்தூரம்மனுக்கு பாலாபிஷேகம் வெள்ளாத்தூரம்மனுக்கு பாலாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவில்களில் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
உடுமலை கோவில்களில் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2016
12:07

உடுமலை: ஆடி பவுர்ணமி மற்றும் குரு பூர்ணிமாவை முன்னிட்டு உடுமலை சுற்றுப்பகுதிளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள்,  வழிபாடுகள் நடந்தது.  ஆடிமாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. உடுமலை தில்லை நகரில் உள்ள  சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு காக்கட ஆரத்தியுடன் தொடங்கிய உற்சவத்தில், கணபதி  ேஹாமம், தத்தாத்ரேயர் ேஹாமம், லட்சுமி ேஹாமம் மற்றும் ஆஞ்சநேயர் ஹோம் நடைபெற்றது. காலை, 8:30 மணிக்கு, பால்,  பன்னீர், சந்தனம், தேன் உட்பட, 16 வகையான அபிேஷகங்கள், மகா தீபாராதனை, ஆரத்தி மற்றும், 108 தம்பதிகள் பங்கேற்ற சத்திய  நாராயண பூஜையும் நடந்தது.

திருவிளக்கு பூஜை..
: மாலை, 5:30 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜையும், சாய்பாபாவுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரமும் நடைபெற்றது.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு சிறப்பு ஆராதானையும், குழந்தைகள் பங்கேற்ற  கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

முற்றோதல்...
: உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி, திருவாசகம் மற்றும் தேவாரம்  முற்றோதல் நடந்தது. பக்தர்களால் நாராயண பாராயணம் படிக்கப்பட்டது. அம்மனுக்கு, திருநீறு, சந்தனம், பால், மஞ்சள், இளநீர் மற்றும்  தயிர் உட்பட, 18 வகையான அபிேஷகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது. அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், தில்லை நகர் சிவன் கோவில், காமாட்சியம்மன் கோவில், முத்தைய பிள்ளை லே–அவுட் சித்தி விநாயகர் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar