புதுடில்லி: ’திருப்பதி கோவிலுக்கு மேலே, ’விமானங்கள் பறக்கக் கூடாத பகுதி’ என்று அறிவிப்பதற்கான வாய்ப்பு இல்லை’ என, மத்திய விமான போக்குவரத்து துறை கூறியுள்ளது. ராஜ்யசபாவில் நேற்று, விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, எழுத்து மூலம் அளித்த பதில்: ஆந்திராவில், திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலுக்கு மேல் உள்ள வான் வெளியை, விமானங்கள் பறக்கக்கூடாத பகுதியாக அறிவிக்கும்படி, அம்மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், திருப்பதி விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளின் அமைப்பு காரணமாக, திருப்பதி கோவிலுக்கு மேல் உள்ள வான் வெளியை, விமானங்கள் பறக்கக் கூடாத பகுதியாக அறிவிக்கும் வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.