பதிவு செய்த நாள்
14
செப்
2016
11:09
திருப்பதி: திருமலை தேவஸ்தானம், கருடசேவை நேரத்தை மாற்றியுள்ளது. திருமலையில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில், முக்கிய சேவையாக கருதப்படும் கருடசேவை, வழக்கமாக இரவு, 8:00 மணிக்கு துவங்கி, நள்ளிரவு, 12:00 மணி வரை நடக்கும். இதை காண, காலை முதல், பக்தர்கள் காத்திருப்பர். இந்நிலையில், அக்., 7ம் தேதி நடக்கும் கருடசேவை நேரத்தை, இரவு, 7:30 மணிக்கு துவக்கி, நள்ளிரவு, 12:30 மணி வரை நடத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.