Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சாமுண்டீஸ்வரி கோவிலில் 27 நாள் சண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் அருகே புதிய ஐம்பொன் சிலையால் பரபரப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2016
02:07

கொடுமுடி: கொடுமுடி அருகே, புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில், ஐம்பொன் சிலையை மர்ம நபர்கள் விட்டுச் சென்றது, பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், வெற்றிக்கோனார்பாளையத்தில், புதியதாக கட்டப்பட்டு வரும் பொன்காளியம்மன் கோவில் ஆர்ச்சில், மர்ம நபர்கள் ஐம்பொன் சிலையை வைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பொன்காளியம்மன் கோவிலில், கன்னிமார் சிலைகள் அமைப்பதற்காக, ஆர்ச் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணி இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது. இப்பணி காரணமாக, பொன்காளியம்மன் சிலை, அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, 4 மணிக்கு கோவிலுக்கு வந்த ஆறுமுகம் என்பவர், சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது, ஆர்ச்சில் காளியம்மன் ஐம்பொன்சிலை உள்ளதைக் கண்டு, கோவில் தர்மகர்த்தா சேகரிடம் தகவல் தெரிவித்தார். சேகர் கொடுமுடி போலீஸ் மற்றும் தாசில்தாருக்கு தகவல் அளித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர். கொடுமுடி தாசில்தார் கோவிந்தராஜ், ஐம்பொன் சிலையை கைப்பற்றினார். பின்னர் அவர் கூறியதாவது: சிலையை வைத்துவிட்டு சென்ற மர்ம நபர் யார், எதற்காக சிலையை வைத்துவிட்டு சென்றுள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இச்சிப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்து, நாளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் முறைப்படி ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar