ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னிப் பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வர். பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலிப் பெண்களும் இதில் பங்கேற்றனர். முளைப்பாலிகை என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியதாகச் சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சைப் பயிறு போன்ற விதைகளைத் துõவி கோவிலுக்கு அருகிலேயே தனியாக குடில் அமைத்து, அங்கு வைத்து வளர்ப்பர். ஒவ்வொரு நாள் இரவும் அதனைத் தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம் வந்து பாடுவர். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசிநாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பர். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பர்.