மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளி யம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கடந்த மாதம், 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் செய்து வந்தனர். நேற்று, 14ம் திருநாள் விழாவில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுப்ரமணிய சுவாமி கோவில் அர்ச்சகர்கள் தனசேகர குருக்கள், சுப்ரமணியம், கண்ணன் ஆகிய அர்ச்சகர்கள் திருவிளக்கு பூஜையை நடத்தி கொடுத்தனர். இதில், கட்டளைதாரர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று ஆடி அமாவாசை, ஆடி 18ம் பெருக்கும் விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கோவில் ஊழியர் செய்து வருகின்றனர்.