ஊட்டி: ஊட்டி கீழ் அப்புகோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை பூஜை நடந்தது. சித்தி விநாயகர், முருக பெருமான், ஏழு ஹெத்தையம்மன் தெய்வங்கங்கள் மற்றும் நவகிரக தெய்வங்களுக்கு, அபிஷேக ஆராதனை பூஜை நடந்தது. தொடர்ந்து, பஜனை, ஆன்மிக சொற்பொழிவு இடம் பெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.