Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனகாபுத்துார் ஆலவட்டம்மன் கோவிலில் ... திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டாவது இந்து ஆன்மிக கண்காட்சி நிறைவு
எழுத்தின் அளவு:
எட்டாவது இந்து ஆன்மிக கண்காட்சி நிறைவு

பதிவு செய்த நாள்

09 ஆக
2016
12:08

எட்டாவது இந்து ஆன்மிக கண்காட்சி, சென்னை, மீனம்பாக்கம், ஜெயின் கல்லுாரியில், 2ம் தேதி துவங்கியது. கண்காட்சியின் கடைசி நாளான நேற்று, வனம், வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், விருஷ்ச வந்தனம், நாக வந்தனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் குருமூர்த்தி, துணைத் தலைவர் ராஜலட்சுமி, டி.வி.எஸ்., நிறுவன அதிபர் கோபால் ஸ்ரீனிவாசன், ஜி.எம்.ஆர்., குழுமங்களின் அதிபர் பி.வி.என்.ராவ், டால்மியா சிமென்ட் அதிபர் புனித் டால்மியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரு கோடி மரங்கள் :
மூலிகை மருத்துவர் வாணியம்பாடி அக்பர் கவுசர், குடும்பத்துடன் கண்காட்சியை பார்வையிட்டார். பின், அவர் எழுதிய, இந்து கோவில் மரங்களின் மருத்துவ குணங்கள் என்ற, 887 பக்க நுாலை, ஆடிட்டர் குருமூர்த்திக்கு வழங்கினார். இதையடுத்து, வட மாநிலங்களில் அதிகம் காணப்படும் வன்னி மரங்கள், மிகவும் மருத்துவ குணம் கொண்டவை. எனவே, இந்து அமைப்புகள் மூலம் தமிழகத்தில், ஒரு கோடி வன்னி மரங்களை நடும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதேபோல, ஒவ்வொரு கோவிலுக்கும், ஒரு தல விருட்சம் உள்ளது; அவற்றை அதிகம் நட ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.

பாரம்பரிய விளையாட்டு :
கண்காட்சியை முன்னிட்டு, 1,079 பாரம்பரிய விளையாட்டு, பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள, 350 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 1.20 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், முதல் மூன்று இடங்களை பிடித்த, 30 மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியின் இறுதி நிகழ்ச்சியாக, நேற்று மாலை, 6:00 மணிக்கு, கீழ்பென்னாத்துார் அருகில் உள்ள செவரப்பூண்டி காமாட்சி அம்மன் நாடகக் குழு நடத்திய, வன்னியர் புராணம் தெருக்கூத்து நடந்தது. எட்டாவது இந்து ஆன்மிக கண்காட்சியை, ஆறு நாட்களில், 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar