Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல விழா: ... சதுரகிரி உண்டியல் திறப்பு: ரூ.40 லட்சம் காணிக்கை! சதுரகிரி உண்டியல் திறப்பு: ரூ.40 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி அவிட்ட வைபவம்: கோவில்களில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
ஆவணி அவிட்ட வைபவம்: கோவில்களில் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

19 ஆக
2016
11:08

ஆவணி அவிட்டம் வைபவத்தை முன்னிட்டு ஏராளமான பிராமணர்கள், கோவில்களில் புது பூணுால் அணிந்து, மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். உபநயனம் செய்து கொண்ட பிராமணர், ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடே, ஆவணி அவிட்டம் என்னும் வைபவம். இது ரிக், யஜூர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள், பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். தந்தை இல்லாதவர்கள், தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின் தாங்கள் அணிந்துள்ள பூணுாலைப் புதுப்பிப்பதோடு, வேதங்களைப் படிக்கவும் துவங்குவர். ஆவணி அவிட்டமான நேற்று, சென்னை திருவல்லிக்கேணி, திருவான்மியூர், நங்கநல்லுார், மேற்கு மாம்பலம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதி கோவில்கள், திருமண மண்டபங்கள், குளக்கரைகளில் ஏராளமான பிராமணர்கள் புதிய பூணுால் அணிந்து, மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

இதுகுறித்து நங்கநல்லுார், ஹயக்கிரீவர் கோவில் பட்டாச்சாரியார் பார்கவன் கூறியதாவது: நயனம் என்றால் கண். நமக்கு உள்ள இரு நயனங்களுடன் (கண்கள்) மூன்றாவதாக ஞாணக்கண் பெறுவதற்கான சடங்காக, பிராமணர்களால் உபநயனம் செய்யப்படுகிறது. பூணுாலை யக்ஞோபவீதம் என்று அழைப்பர். இதற்கு மிகவும் புனிதமானது என்று பொருள். சமஸ்கிருதத்தில் இது உபாகர்மா என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் துவக்கம் என்பதாகும். வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் இது எனக் கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar