Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி ராகவேந்திரா சுவாமி ... தேவி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம்! தேவி மாரியம்மன் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆக. 22 முதல் ஆவணி திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆக. 22 முதல் ஆவணி திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 ஆக
2016
11:08

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா ஆக., 22 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆக., 31 ல் தேரோட்டம்.12 நாட்கள் திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்தன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 1:30க்கு விஸ்வரூப தீபாராதனை. 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம். காலை 5:00 -- 5:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. பின் கொடி மரத்திற்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு அப்பர் சுவாமிகள்

தங்கசப்பரத்தில் வீதிகளில் உழவாரப்பணிகள் முடித்து இரவு 7:00 மணிக்கு கோயில் வந்து சேர்கிறார். ஆக., 26 ல் 5ம் நாளில் வெள்ளி சப்பரத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர். சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு குட வருவாயில் தீபாராதனை நடக்கிறது. பின் சுவாமியும் அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர். ஏழாம் நாளான ஆக., 28 ல் அதிகாலை 4:30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4:00 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதியுலா வருகிறார். ஆக., 29 ல் மாலை சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் வீதியுலா வருகிறார். ஆக., 31 ல் காலை 6:30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பின் ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடக்கிறது. செப்., 2 ல் மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருகின்றனர்.ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar