திருச்சி: சர்க்கார்பாளையம், காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மூன்று முறை சூரிய வழிபாடு நடைபெறுகிறது. அதன்படி, நேற்று சூரியக்கதிர்கள் மூலவர் சன்னதியில் பிரதிபலித்தது. காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.