பதிவு செய்த நாள்
25
ஆக
2016
11:08
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குப்பின், 500க்கும் மேற்பட்ட சிலைகள் கள்ளக்குறிச்சியிலிருந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம். இதற்கான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தச்சூர் பகுதியில், தீவிரமாக நடந்து வருகிறது. பல வண்ணங்களில் மூன்றரை அடியிலிருந்து 15 அடி வரையிலான சிலைகள் இங்கு தயாரிக்கப்படுகிறது. விநாயகர் நின்ற நிலை, அண்ணாமலை, லேட்டஸ்ட் பாகுபலி, வெங்கடாஜலபதி, சிங்க முகம், 3 தலை, யானை, எலி, காளை, மான், ஜான்சிராணி, காளிங்க நந்தனார், பறக்கும் அனுமன் மீது அமர்ந்த விநாயகர் என பல வடிவ சிலைகள் 300க்கும் மேற்பட்ட வடிவில், சிலைகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. கல் மாவு, பேப்பர் மாவு, கிழங்கு மாவு போன்ற பொருட்களில் தயாரிக்கப்படும் சிலைகள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.