பதிவு செய்த நாள்
26
ஆக
2016
12:08
காக்களூர் :திருவள்ளூரை சுற்றி உள்ள குரு கோவில்களில், நேற்று, சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, காக்களூர் ஊராட்சி, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக் கிழமையான நேற்று, காலை, 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், காக்களூர், பூங்கா நகர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ -- விஷ்ணு கோவில் மணவாள நகர் மங்களீஸ்வரர் கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, குரு பகவானை தரிசனம் செய்து வழிபட்டனர்.