உடுமலை: உடுமலை தில்லைநகர், சாய்பாபா கோவிலில், கோகுலாஷ்டமியையொட்டி சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடைபெற்றது. பகவான் கிருஷ்ணர் பிறந்த தினம் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் கிருஷ்ணருக்கு, சிறப்பு அபி ேஷகங்கள், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. சாய்பாபா கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை: ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமியன்று காலபைரவருக்கு உகந்த தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று, சிறப்பு அபிேஷகங்கள் செய்யப்படுவது வழக்கம். இதனையொட்டி தில்லை நகர் சிவன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர்.
திருவாசகம் முற்றோதல்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. தொடர்ந்து இன்னிசைக்குழுவினரின் பஜனையும், பாராயணமும் படிக்கப்பட்டது. கிருஷ்ணர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபி ேஷகங்கள் நடந்தது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.